யாஹூ
காஷ்மீரில் பனிச்சரிதலில் சிக்கி 15 இராணுவத்தினர் பலி, மேலும் 17 பேர் காயம்!
காஷ்மீரில் திடீரென்று ஏற்பட்ட பயங்கர பனிச்சரிதிலில் சிக்கிய இந்திய இராணுவத்தின் பனி மலைப் போர்ப் பயிற்சிப் படையைச் சேர்ந்த 15 பேர் கொல்லப்பட்டனர்.
Categories: General News
7.30 மணி முதல் 2.30 மணி வரை தாக்கினார்கள் - அகதிகள் கடிதம்
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஈழத் தமிழ் அகதிகள் மீது காவல் துறையினர் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் குறித்து, பாதிக்கப்பட்டு தற்போது வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள் எழுதிய கடிதம் இங்கே அப்படியே அளிக்கப்படுகிறது.
Categories: General News
மே.வங்காளத்தில் முஸ்லிம்களுக்கு 10 % இட ஒதுக்கீடு
மேற்கு வங்கத்தில் இஸ்லாமியர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
Categories: General News
மீள்குடியேற்றம் இப்போதைக்கு இல்லை: இலங்கை
ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின்னரே இடம்பெயர் முகாம்களில் எஞ்சியுள்ள வன்னி மக்கள் மீளக் குடியமர்த்தப்படுவார்கள் என்று இலங்கை அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Categories: General News
நமது ஒரே அடையாளம் தமிழன் என்பதே: கிருஷ்ணசாமி
இலங்கையில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டபோது அதனை நம்மால் தடுத்து நிறுத்த முடியாததற்குக் காரணமான ஒற்றுமையின்மையை தகர்த்தெறிய சாதிய, மத அடையாளங்களை தூக்கி எறிவோம் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி கூறினார்.
Categories: General News
சீனாவில் 3 ஆயிரம் டயனோசரஸ் கால் சுவடுகள் கண்டுபிடிப்பு
சீனாவில் சுமார் மூன்றாயிரம் டயனோசரஸ்களின் கால் சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தொல்லியல் துறை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Categories: General News
'ஹேக்கர்' இணையதளம் மூடப்பட்டது: சீனா நடவடிக்கை
சீனாவின் மிகப்பெரிய 'ஹேக்கர்' பயிற்சி இணைய தளத்தை அந்நாட்டு காவல் துறையினர் மூடியுள்ளதோடு, மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
Categories: General News
அனைவருக்கும் உண்டு பேச்சுரிமை: ஷாருக்கானுக்கு பிரணாப் ஆதரவு
கொல்கட்டா: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஐ.பி.எல். தொடர்பாக தெரிவித்த கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், “நாட்டில் உள்ள அனைவருக்கும் பேச்சுரிமை உண்டு; அதனை மறுக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது” என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
Categories: General News
பவார்-தாக்கரே சந்திப்பு: அதிருப்தியில் அசோக் சவான்
புதுடெல்லி: ஆஸ்ட்ரேலிய வீரர்களுக்கு எதிராக அறிவித்த ஆர்ப்பாட்டத்தை விலக்கிக் கொள்ளும்படி சிவசேனா தலைவர் பால் தாக்கரேவைச் சந்தித்து மத்திய அமைச்சரும், பிசிசிஐ தலைவருமான சரத் பவார் கோரிக்கை விடுத்திருப்பது, மராட்டிய முதல்வர் அசோக் சவானை அதிருப்தியில் ஆழத்தியுள்ளது.
Categories: General News
சிறிய தாக்குதல்களில் அல் - காய்தா கவனம் திரும்பிவிட்டது: யு.எஸ்.
அல் - காய்தா பயங்கரவாத இயக்கம் சிறிய அளவிலான தாக்குதல்கள் மீது தனது கவனத்தை திசை திருப்பியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
Categories: General News
சென்செக்ஸ் 20-நிஃப்டி 03 புள்ளி உயர்வு
காலையில் சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை, இறுதி வரை அதிக அளவு ஏற்ற இறக்கத்துடன் இருந்தது.
வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 19.96 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 15,935.61 ஆக உயர்ந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 03.15 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 4760.40 ஆக அதிகரித்தது.
மிட் கேப் 05.57, சுமால் கேப் 06.73 புள்ளிகள் குறைந்தது. பி.எஸ்.இ 500-03.66 அதிகரித்தது.
Categories: General News
காஷ்மீரில் பயங்கர பனிச்சரிவு: 450 ராணுவ வீரர்கள் கதி என்ன?
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள கிலன்மார்க் பகுதியில் இன்று பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கு செயல்பட்டு வந்த உயர்மட்ட போர்ப் பயிற்சி பள்ளியைச் சேர்ந்த 450க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் சிக்கிக் கொண்டதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Categories: General News
உல்ஃபாவுக்கு ஆயுதக்கடத்தல்: முன்னாள் வங்கதேச பிரதமர் மகனுக்கு தொடர்பு
தோல்வியில் முடிந்த ஆயுதக் கடத்தல் முயற்சி ஒன்றில் வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது
Categories: General News
கோட்டூர்புரம் நூலகத்துக்கு 1000 நூல்கள் வழங்கினார் கருணாநிதி
சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் அமைய உள்ள அண்ணா நூலகத்திற்கு முதலமைச்சர் கருணாநிதி ஆயிரம் நூல்களை வழங்கினார்.
Categories: General News
தமிழ்நாடு வெடிமருந்து நிறுவனத்தில் விபத்து: 7 ஊழியர்கள் படுகாயம்
வேலூர்: தமிழ்நாடு வெடிமருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட 7 ஊழியர்கள் பலத்த காயம் அடைந்தனர்.
Categories: General News
உணவு பொருட்கள் விலை கட்டுப்படுத்தப்படும்; பிரணாப் முகர்ஜி
உணவுப் பொருட்களின் விலை நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதுடன், இவற்றின் விலை அதிகரிப்பது விரைவில் கட்டுப்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
Categories: General News
இலங்கை நாடாளுமன்றம் நாளை கலைக்கப்படுகிறது?
மூன்று நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ள அதிபர் ராஜபக்ச நாளை நாடு திரும்பியவுடன் நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்படும் என அரசு வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகி உள்ளது.
Categories: General News
விலைவாசி உயர்வு விரைவில் கட்டுக்குள் வரும்: பிரணாப் முகர்ஜி
கொல்கட்டா: நாட்டின் உணவுப்பொருள் பணவீக்கம் 17 சதவீதத்தை கடந்துள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்வு விரைவில் கட்டுக்குள் வரும் என நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
Categories: General News
நேபாளம்: குண்டுவெடிப்பில் இந்தியர் காயம்
நேபாளத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் இந்தியர் ஒருவர் உட்பட இரண்டு பேர் காயமடைந்தனர்.
Categories: General News
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கி.வீரமணி கோரிக்கை
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 8 நீதிபதி இடங்களுக்கு காலதாமதம் செய்யாமல் சமூக நீதி கண்ணோட்டத்தில் தகுந்தவர்களை பரிந்துரை செய்து பட்டியலை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அனுப்பி வைக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கோரிக்கை வைத்துள்ளார்.
Categories: General News




