யாஹூ
இலங்கைத் தமிழ் அகதிகளை நிரந்தரமாகக் குடியமர்த்தும் திட்டம் இல்லை: மத்திய அரசு
இலங்கைத் தமிழ் அகதிகளை தமிழகத்தில் நிரந்தரமாகக் குடியமர்த்தும் திட்டம் எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை என்று உள்துறை இணை அமைச்சர் அஜய் மக்கான் தெரிவித்துள்ளார்.
Categories: General News
வன விலங்குகளை வேட்டையாட அனுமதி இல்லை - மத்திய அரசு
குறிப்பிட்ட வன விலங்குகளை வேட்டையாடுவதற்கு அனுமதி அளிக்கும் திட்டம் அரசிடம் இல்லையென்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
Categories: General News
ஓரிரு நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு - மழைராஜ்
தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதால் இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று மழை குறித்து ஆய்வு செய்துவரும் மழைராஜ் கூறியுள்ளார்.
Categories: General News
ஆஃப்கானில் இந்திய தூதரக பணியாளர் எண்ணிக்கை குறைக்க அரசு முடிவு
பிப்ரவரி 26ஆம் தேதி நடந்த தாக்குதலையடுத்து, ஆஃப்கானில் இந்திய தூதரக அலுவலர் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
Categories: General News
கலை ஆர்வத்தை சிதைத்த கல்லூரி முதல்வர்!
பத்திரிக்கையாளர்களுக்கு ஒரு திடீர் அழைப்பு. அழைப்பை விடுத்தது சென்னை அரசு கவின்கலைக் கல்லூரி மாணவர்கள்!
விடயத்தை அறியச் சென்ற நமக்கு, அவர்கள் தங்களுக்கு நேர்ந்த சோதனையை விளக்க, இப்படியும் நடக்குமா என்ற ஆச்சரியமும், பாதிக்கப்பட்ட மாணவர்களின் நிலையை நினைத்து வேதனையும் ஏற்பட்டது.
Categories: General News
சீனா அதிகளவு தங்கத்தில் முதலீடு செய்ய திட்டம்
சீனா தன்னிடம் உள்ள அந்நியச் செலவாணியை பயன்படுத்தி தங்கம் வாங்க போவதாக அறிவித்துள்ளது.
சீனாவிடம் அதிக அளவு அந்நியச் செலவாணி இருப்பு உள்ளது. இவை அமெரிக்க கடன் பத்திரங்கள் வடிவில் உள்ளன. அமெரிக்க கடன் பத்திரங்களில் செய்துள்ள முதலீட்டை திரும்ப பெற்று, அதிலிருந்து கிடைக்கும் டாலரை பயன்படுத்தி தங்கம் வாங்க போவதாக அறிவித்துள்ளது.
Categories: General News
நிலநடுக்க விளைவு: கன்செப்சியான் நகரம் நகர்வு
பிப்ரவரி 27ஆம் தேதி சிலியில் ஏற்பட்ட 8.8 ரிக்டர் அளவுகோல் நிலநடுக்கம் காரணமாக நிலநடுக்க மையத்தில் சிக்கிய கன்செப்சியான் நகரம் மேற்கு நோக்கி 10 அடி நகர்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Categories: General News
சென்செக்ஸ் 46-நிஃப்டி 15 புள்ளி உயர்வு
காலையில் உயர்வுடன் தொடங்கிய பங்குச் சந்தை, கடைசி வரை அதிக மாறுதலுடன் இருந்தது.
வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 45.79 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 17,098.33 ஆக உயர்ந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 14.75 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 5116.25 ஆக அதிகரித்தது.
Categories: General News
மும்பை:தங்கம்-வெள்ளி விலை உயர்வு
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் நேற்று குறைந்த தங்கம் வெள்ளி விலை இன்று அதிகரித்தது.
இன்று 22 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.65 அதிகரித்தது.
பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.310 அதிகரித்தது.
Categories: General News
மக்களவையிலும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற விஜயகாந்த் வலியுறுத்தல்
சென்னை: மகளிர் இடஒதுக்கீடு மசோதா தற்காலிகமாக அரைகிணறு தாண்டியதாக ஆகிவிடக்கூடாது என்றும் மக்களவையிலும் இந்த மசோதா உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
Categories: General News
கடும் அமளியால் மக்களவை நாள் முழுவதும் தள்ளிவைப்பு
புதுடெல்லி: மகளிர் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் நாள் முழுவதும் தள்ளிவைக்கப்பட்டது.
Categories: General News
பென்னாகரம் இடைத்தேர்தல்: நரேஷ் குப்தாவிடம் பா.ம.க. புகார் மனு
சென்னை: பென்னாகரம் தொகுதியில் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள், காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவிடம் பா.ம.க. சட்டமன்ற உறுப்பினரும், அந்த கட்சியின் தேர்தல் பணிக்குழு தலைவருமான வேல்முருகன் புகார் மனு கொடுத்தார்.
Categories: General News
பால்வினை நோய் பரப்பிய இளைஞருக்கு 7 ஆண்டு சிறை
சென்னை: பால்வினை நோயை பரப்பிய இளைஞருக்கும், உதவி செய்த தங்கைக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Categories: General News
தேயிலை மறு ஏற்றுமதியில் ஐக்கிய அரபு குடியரசு முதலிடத்தில்
தேயிலை ஏற்றுமதியில் ஐக்கிய அரபு குடியரசு 6 வது ஆண்டாக முன்னணியில் உள்ளது.
Categories: General News
நளினி விடுதலை தொடர்பான அறிக்கையை நாளை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: நளினி விடுதலை தொடர்பான ஆலோசனை குழு அறிக்கையை தமிழக அரசு நாளை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Categories: General News
பா.ம.க.- மார்க்சிஸ்ட் கட்சியினர் 99 பேருக்கு நிபந்தனை பிணை
சென்னை: மக்கள் தொலைக்காட்சி அலுவலகம், மார்ச்சிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கில் கைதான பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சியை சேர்ந்த 99 பேருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனை பிணை வழங்கியுள்ளது.
Categories: General News
பென்னாகரம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
சென்னை: பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதிக்கான இறுதி வாக்காளர் பட்டியலை தர்மபுரி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான அமுதா இன்று வெளியிட்டுள்ளார்.
Categories: General News
சர்க்கரை-பருப்பு விலை குறைந்துள்ளது
பருப்பு, சர்க்கரை விலை பல பகுதிகளில் குறைந்துள்ளது. அதே நேரத்தில் கோதுமை, சமையல் எண்ணெய் விலை உயராமல் உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Categories: General News
கைத்தறி நெசவாளர் சங்கத்தில் ரூ.30 கோடி மோசடி: நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: ஈரோடு சென்னிமலை கைத்தறி நெசவாளர் சங்கத்தில் ரூ.30 கோடி முறைகேடு புகார் குறித்து 4 வாரத்தில் நடவடிக்கை எடுக்க கைத்தறித்துறை இயக்குனருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Categories: General News
புத்த மதத்தை அழிக்க முயற்சிக்கிறது சீனா: தலாய் லாமா குற்றச்சாற்று
திபெத் பிரச்சனைக்கு தான் முன்னெடுத்த அனைத்து முயற்சிகளையும் கண்டுகொள்ளாமல் தட்டிக்கழித்த சீன அரசு, திபெத்தில் புத்த மதத்தை முழுமையாக அழித்து ஒழித்துவிடும் திட்டத்துடன் செயல்பட்டு வருகிறது என்று தலாய் லாமா குற்றம் சாற்றியுள்ளார்.
Categories: General News




